கொலை வழக்கில் 6 நாளில் தீர்ப்பு
சென்னை:
கொலை நடந்து ஆறே நாளில் தீர்ப்பு வழங்கி செங்கல்பட்டு விரைவு நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது.
சமீப காலமாக சென்னை நீதிமன்றங்கள் விரைவாக தீர்ப்புகளைக் கூறி சாதனை படைத்து வருகின்றன. ஒரு மாதத்தில், 20நாளில், 14 நாளில் என தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில், கொலை நடந்து 6நாட்களிலேயே ஒரு வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி லத்திகா. ஜூன் 29ம் தேதி லத்திகா மீதுமண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொளுத்தினார் ராஜேந்திரன். இதில் தீயில் கருகி லத்திகா இறந்து போனார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ராஜேந்திரனை தாம்பரம் போலீஸார் கைது செய்தனர். செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில்ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு விரைவு நீதிமன்றத்திற்கு வழக்குமாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து ராஜேந்திரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து முடிந்து நேற்றுதீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றவாளி ராஜேந்திரனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ. 500 அபராதம் (கட்டாவிட்டால் மேலும் 6 மாதம்சிறைத் தண்டனை) விதித்து நீதிபதி ஜெயரட்சகன் தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications