ஜெயலட்சுமி: சப் இன்ஸ்பெக்டரை கைது செய்ய உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலட்சுமி வழக்கில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டரை கைது செய்ய பூந்தமல்லி வெடிகுண்டுவழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக முருகேசன் உள்ளிட்ட 9 பேரை ஸ்ரீவில்லிபுத்தூர் சப் இன்ஸ்பெக்டர் வெள்ளையன் கைது செய்தார். இந்தவழக்கு கடந்த 2002ம் ஆண்டு பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் சாட்சி கூறுவதற்காக வெள்ளையனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் சம்மனை வாங்க மறுத்துவிட்டார். இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சம்மனை வாங்க மறுத்த வெள்ளையனைகைது செய்ய வாரண்ட் பிறப்பித்து நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட வெள்ளையன் தற்போது சிவகாசி ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் கடத்தப்பட்ட வழக்கில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications