ஆடிட்டர் வழக்கு: ஜெயேந்திரர் சைதை கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் குற்றப் பத்திரிக்கை நகலைப் பெறுவதற்காக ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேர்சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இருப்பினும் அவர்களுக்கு வருகிற 18ம் தேதி நகல்வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
இவர்கள் மீது கடந்த மே மாதம் சைதாப்பேட்டை 23வது குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது. இதையடுத்து இன்று குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்ட 9 பேர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தனர். அப்பு,கதிரவன் ஆகியோர் மட்டும் ஆஜராகவில்லை. இதையடுத்து வருகிற 18ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி உமாமகேஸ்வரி, அன்று குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதற்கிடையே, சங்கரராமன் படுகொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வருகிற 12ம் தேதி ஜெயேந்திரர் உள்ளிட்ட 24பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications