For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கும்பகோணம் தீ விபத்து: 16ம் தேதி நினைவு தினம்

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

கும்பகோணத்தில் பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 94 குழந்தைகள் பரிதாபமாக இறந்ததன்முதலாமாண்டு நினைவு தினம் வருகிற 16ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து 3 நாட்களுக்கு நினைவுநாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 16ம் தேதி கும்பகோணம் கிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பச்சிளம்குழந்தைகள் உயிரோடு எரிந்து இறந்தனர். இந்த கோரச் சம்பவம் நடந்து வருகிற 16ம் தேதியுடன் ஒரு ஆண்டுமுடிவடைகிறது.

இதையடுத்து 3 நாள் இரங்கல் நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகமும், பெற்றோர்களும் முடிவு செய்துள்ளனர்.இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் வீர சண்முகமணிதலைமையில் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் வருகிற 14ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நினைவு நாள் நிகழ்ச்சிகளை நடத்த முடிவுசெய்யப்பட்டது. இந்த மூன்று நாட்களும் இரங்கல் கூட்டங்கள், சர்வ மத பிரார்த்தனை, ஊர்வலம் உள்ளிட்டவைநடத்தப்படும்.

உயிரிழந்த குழந்தைகள் நினைவாக நினைவிடம் கட்டித் தரப்படும் என்றும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். அரசு வழங்கும் இடத்தில் நினைவிடம் கட்ட ஒப்புக்கொள்வதாக கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X