ராஜீவ் கொலை: 2 புலிகள் விடுதலையை எதிர்த்து சிபிஐ அப்பீல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த லிங்கம் மற்றும் வசந்தனை சென்னைஉயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து சிபிஐ, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டால்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 26 பேர் மீது பூந்தமல்லி தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது. இதைஎதிர்த்து 26 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதில், முருகன், நளினி உள்ளிட்ட 4 பேருக்கு தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு நளினி கருணை மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவரதுதண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. முருகன் உள்ளிட்ட 3 பேரும் கருணை மனு தாக்கல் செய்தனர். அவைகுடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளன.

இந் நிலையில் ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புள்ளவர்கள் குறித்து விசாரிக்க பல்நோக்கு விசாரணை கமிட்டிஅமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, செங்கல்பட்டு அகதிகள் முகாமில் அகதிகளாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த வசந்தன், லிங்கம் ஆகியோருக்கு ராஜீவ் கொலையில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தது.

இருப்பினும் இவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தால் இந்த வழக்கிலிருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டவர்கள்ஆவர்.

இதையடுத்து இருவரது விடுதலையையும் எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல் முறையீடு செய்துள்ளது. இந்த மனுமீதான விசாரணை அடுத்த மாதம் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+