For Daily Alerts
Just In
ஜனாதிபதி மாளிகையில் ராணுவ வீரர் தற்கொலை
டெல்லி:
குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகை ராணுவத்தின் பாதுகாப்பில் உள்ளது. இங்கு நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததலைமைக் காவலர் குல்வந்த் சிங் (வயது 37) திடீரென தன்னிடமிருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டார்.
இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்இறந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இது குறித்து சாணக்கியபுரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Story first published: Wednesday, July 6, 2005, 5:30 [IST]