For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரன் விடுதலை: அமலாக்கப் பிரிவு அப்பீல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மூன்று அன்னியச் செலாவணி வழக்குகளிலிருந்து டி.டி.வி.தினகரன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னைஉயர்நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கப் பிரிவு மேல் முறையீடு செய்துள்ளது.

சென்னை எழும்பூர் 2வது பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் தினகரன் மீது 5 அன்னியச் செலாவணி மீறல் வழக்குகளைமத்திய அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்தது. இதில் 3 வழக்குகளிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி தினகரன் மனுசெய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகம், தினகரனை 3 வழக்குகளிலிருந்து விடுதலை செய்து கடந்த 1ம் தேதிஉத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மத்திய அமலாக்கப் பிரிவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதை விசாரணைக்குஏற்ற நீதிபதி சி.நாகப்பன், தினகரனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X