அத்வானி இன்று அயோத்தி செல்கிறார்
டெல்லி:
பாஜக தலைவர் அத்வானி இன்று அயோத்தி புறப்பட்டார். அயோத்தி செல்லும் வழியில் லக்னோ விமான நிலையத்தில் அவர்,நிருபர்களிடம் கூறுகையில் தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.
அயோத்தி ராமஜென்ம பூமி வளாகத்தில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சம்பவம் நடந்த அன்றே அயோத்தியா பகுதிக்கு செல்லப்போவதாக அத்வானி முதலில் தெரிவித்தார். பிறகு கட்சியின் மூத்ததலைவர்களை அனுப்பி அவர்களிடம் விவரங்களை கேட்ட பிறகு அயோத்தியா செல்லவிருப்பதாக கூறினார்.
இந் நிலையில் அத்வானி இன்று (வெள்ளிக்கிழமை) அயோத்தியா செல்லவிருக்கிறார் என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர்சுஷ்மா ஸ்வராஜ் டெல்லியில் நேற்று தெரிவித்தார்.
இதன்படி, இன்று காலை டெல்லியிலிருந்து புறப்பட்ட அத்வானி பகல் 12.30 மணியளவில் லக்னோ அடைந்தார். விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தீவிரவாதிகளை ஒடுக்க பொடா போல ஒரு கடுமையான சட்டத்தைகொண்டு வரவேண்டும்.
நாங்கள் ஆட்சியில் இருந்த போது கொண்டு வந்த இந்த பொடா சட்டத்தால் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால்இந்த சட்டத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு ரத்து செய்தது துரதிர்ஷ்டவசமானது.
அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால்இந்தியாவில் தான் இருந்த சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்றார்.