நுழைவுத் தேர்வு: பாமக மாணவர் போராட்டம் வாபஸ்
சென்னை:
நுழைவுத் தேர்வு விவகாரம் தொடர்பாக பாமக மாணவர் சங்கம் அறிவித்த வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் வாபஸ்பெறப்படுவதாக பாமக தலைவர் ஜிகே மணி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புற ஏழை, எளிய மக்களின் நலனுக்காக நுழைவுத் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று பாமக நீண்ட காலமாக போராடி வருகிறது.
மிகத் தாமதமாக இதை உணர்ந்த இந்த அரசு, இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. ஆனாலும்அரசின் அரைகுறையான நடவடிக்கையால் இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அரசின் இந்த நடவடிக்கை காரணமாக கிராமப்புற மாணவர்களிடையே கோபமும், கொந்தளிப்பும் ஏற்பட்டது. இதன்வெளிப்பாடாக 12ம் தேதி ஒரு நாள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தப் போவதாக பாமக மாணவர் சங்கம்சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் அடுத்த ஆண்டில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசுசார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் தேவையில்லை என்று கட்சி முடிவு செய்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications