வங்கி ஊழியரைக் கொன்று ரூ.10 லட்சம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இன்று பகலில் வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று ரூ. 10 லட்சம்பணத்தை முகமூடித் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஆரணி அருகே அவர்கள் வந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை வழிமறித்தனர். முகமூடிஅணிந்திருந்த இரண்டு பேரும் வங்கி ஊழியர்களை தாக்கினர். மூர்த்தியை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் மூர்த்தி நெஞ்சில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் ராஜசேகரிடமிருந்து ரூ. 10 லட்சம்பணத்தையும் பறித்துக் கொண்டு முகமூடிக் கும்பல் தப்பிச் சென்றது.
பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவத்தால் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. கொலையாளிகளைப் பிடிக்கதிருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications