660 சாயப் பட்டறைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை:
ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளில் இயங்கி வரும் 660 சாயப் பட்டறைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம்அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக இந்த சாயப்பட்டறைகளிலிருந்து வெளியாகும் சாயக் கழிவு நீர் ஒரத்துப்பாளையம் அணையில் கலந்துநிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. அணையில் தேங்கி நிற்கும் சாயக் கழிவு நீரை திறந்து விட்டால் கரூர் பகுதியில் விவசாயிகளுக்குபெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் நொய்யல் ஆற்று நீரும் மாசுபட்டு விட்டது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்தஉயர்நீதிமன்றம், சாயப் பட்டறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுத்திகரிப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க நிபுணர் குழுவைஅமைத்தது.
இந்தக் குழுவினர் சமீபத்தில் ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து சுத்திகரிப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டுஆய்வு செய்தது.
இதன் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றையும் இக்குழு தாக்கல் செய்தது. இந்த நிலையில் இவ்வழக்கு இன்றுமீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வழக்கறிஞர், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இயங்கி வரும் 660 சாயப் பட்டறைகளில் முறையான சுத்திகரிப்புவசதிகள் இன்னமும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் கற்பக விநாயகம், நிாகப்பன் ஆகியோர், உடனடியாக இந்த 660 சாயப்பட்டறைகளையும் மூட வேண்டும். இந்த பட்டறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படவேண்டும்.
இந்த உத்தரவுகளை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முறையாக செயல்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், மாவட்டஆட்சித் தலைவர்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்என்றும் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர். அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற 21ம் தேதிக்கு நீதிபதிகள்ஒத்திவைத்தனர்.
உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு காரணமாக ஈரோடு, திருப்பூர் பகுதி சாயப்பட்டறை அதிபர்கள்,தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications