For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயேந்திரர் விவகாரம்: எங்களுக்கு ஒன்னுமே தெரியாது- அமைச்சர்

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் கருவறைக்குள் ஜெயேந்திரரை அனுமதிக்காத விவகாரத்தில் தமிழகஅரசுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி கூறியுள்ளார்.

ஜெயேந்திரர் ராமேஸ்வரத்திற்கு சென்றிருந்தபோது ராமநாதசுவாமி கோவில் கருவறைக்குள் சென்று பூஜைசெய்ய கோவில் நிர்வாகமும், அர்ச்சகர்களும் அனுமதிக்கவில்லை.

முன் கூட்டியே அனுமதி பெறாததால், ஜெயேந்திரரை அனுமதிக்கவில்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில்கூறப்பட்டது. இரண்டு முறை முயன்றும் ஜெயேந்திரரால் கருவறைக்குள் செல்ல முடியவில்லை. இதனால்ஏமாற்றத்துடன் அவர் கலவைக்குத் திரும்பினார்.

இந்து அறநிலையத்துறையின் ஆணையர் அனுமதி தரக் கூடாது என்று கூறிவிட்டதாக கோவில் நிர்வாகிகள்ஜெயேந்திரரிடம் கூறினர்.

இந் நிலையில் திருநெல்வேலியில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் பி.சி.ராமசாமி கூறுகையில்,

அச் சம்பவம் முற்றிலும் கோவில் நிர்வாகம் தொடர்புடையது. அரசுக்கும், இதற்கும் எந்த சம்பந்தம் இல்லை.

(அடடே, அப்படியா?).தேவையில்லாமல் இப்பிரச்சினையை சிலர் பெரிதுபடுத்துகிறார்கள். இதற்கு முன்பெல்லாம் கோவிலுக்குவரும்போது முன் கூட்டியே சொல்லி விட்டுத்தான் அவர் வந்துள்ளார். அதனால் பிரச்சினை எழவில்லை.

ஆனால் இந்த முறை சொல்லாமல் கொள்ளாமல் அவர் வந்ததால்தான் குழப்பம் ஏற்பட்டு விட்டது. இதற்குஅரசைக் குறை கூறுவது நியாயமல்ல என்று கூறினார் ராமசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X