ஜெ. உத்தரவு: நினைவிடமாகிறது தமிழ் தாத்தாவின் இல்லம்
சென்னை:
தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், ஓலைச் சுவடிகளில் இருந்த பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களில் புறநானூ
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்களையும் பதிப்பித்து வெளிக்கொணர்ந்து தமிழ்இலக்கியங்களைப் பாதுகாத்த பெருமைக்குரியவர் ஆவார்.
செல்லரித்தும், சேதமுற்றும், அழியும் நிலையில் இருந்த ஓலைச் சுவடித் தமிழை அச்சுத் தமிழாக்கியதோடு, புதிய நூல்களையும்படைத்துத் தமிழுக்கு வளம் சேர்த்த தமிழ்த் தாத்த உ.வே.சாமிநாதய்யர்.
அவரது அரும் பணிகளைப் பாராட்டி அவரது பிறந்த நாளான பிப்ரவரி 19ம் தேதியன்று, சென்னை மாநிலக் கல்லூரிவளாகத்தில் உள்ள அவரது திருவுறுவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியை, தமிழ்நிாடு அரசு சார்பில் ஆண்டுதோறும்நடத்த முதல்வர் ஜெயலலிதா தனது முந்தையை ஆட்சிக் காலத்திலேயே, ஆணை பிறப்பித்தார்.
தமிழ்த் தாத்தாவின் 150வது பிறந்த நாளையொட்டி அன்னைத் தமிழ் மொழிக்கு தொண்டுள்ளத்தோடு அவர் ஆற்றியபணிகளைத் தமிழக மக்கள் என்றென்றும் நினைவு கொள்ளவும், இளைய தலைமுறையினருக்கு அவரது தமிழ்த் தொண்டினைஎடுத்துக் காட்டவும்,
உ.வே.சுவாமிநாதய்யர் வாழ்ந்த சரஸ்வதி இல்லத்தை நாட்டுடமையாக்கி, 11.50 லட்சம் செலவில் பழுது பார்த்து நினைவுஇல்லமாக போற்றிப் பாதுகாக்க முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி ஆணையிட்டார்.
மிகவும் பழமையான அந்த இல்லம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கன மழையால் மிகவும் பாதிப்படைந்ததால்,இதனை பழைய இல்லப் பாங்கு மாறாமல் புதுப் பொலிவுடன் உருவாக்கிப் போற்றுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதி,திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம், உத்தமதானபுரத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்தை 1.37 லட்சம் செலவில்அரசு வாங்கிக் கொள்ளவும்,
மேற்கொண்டு ரூ. 23 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு நினைவு இல்லம் அமைத்திடவும்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.