மலேசியா: சித்திரவதையிலிருந்து மீண்ட தமிழக வாலிபர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மலேசியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு போலீஸாரிடம் சிக்கி சித்திரவதை அனுபவித்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவாலிபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம் பெரும்புதூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் ரூ. 1 லட்சம் கமிஷன் கொடுத்து ஒரு ஏஜென்டு மூலம்மலேசியாவுக்கு வேலைக்காக சென்றார்.

மாதம் ரூ. 10,000 சம்பளம் என்று கூறி மலேசியாவுக்கு அனுப்பப்பட்ட தங்கராஜுக்கு, மிளகாய் பொடி அரைக்கும் நிறுவனத்தில்வேலை தரப்பட்டது. அவருக்கு சாப்பாட்டுக்கு மட்டுமே பணம் கொடுக்கப்பட்டது.

இந் நிலையில் அங்கிருந்து தப்ப முயன்றபோது மலேசிய போலீஸாரிடம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார் தங்கராஜ். அங்குபோலீஸ் சித்திரவதைக்கும் ஆளானார். தங்கராஜை மீட்கக் கோரி அவரது மனைவி சென்னைக்கு வந்து காவல்துறை ஆணையர்நடராஜிடம் புகார் கொடுத்தார்.

இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க நடராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம்தங்கராஜை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் பலனாக தங்கராஜ் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். பின்னர் சொந்த ஊருக்குஅவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+