இந்திய- இலங்கை தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைக்க பழ. நெடுமாறன் முயற்சி
சென்னை:
இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் முனைவர்கள் க.ப.அறவாணன்,தமிழப்பன், ஆறு. அழகப்பன், மணவை முஸ்தபா, வீ.அரசு, மரு.செ.நெ.தெய்வநாயகம்,
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பெ. சந்திரசேகரன், கவிஞர் காசி. ஆனந்தன், க.சச்சிதானந்தன், திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கச் செயலாளர் முத்துராமன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரு.வெ.குழந்தைவேலு, புலவர் அறிவுடை நம்பி,
த.சுந்தரராசன், முகம் மாமணி, வ.வேம்பையன், நா.ப.இராமசாமி, புலவர் இறைக்குருவனார், இராசேந்திர சோழன், சூரியதீபன்,வீர. சந்தானம், தேனிசை. செல்லப்பா உட்பட ஏராளமான தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.
1. இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்காக முதலில் தனித் தனிக் குழுக்கள்அமைப்பது என்றும் பிறகு இரண்டையும் இணைத்து ஒரே குழுவாக ஆக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
2. இந்தியாவில் உள்ள தமிழ் அமைப்புகளை இணைப்பதற்காகக் கீழ்க் கண்டவர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக்குழுஅமைக்கப்பட்டது.
இந்திய தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு:
புலவர் க. சுப்ரமணியம், புலவர் அறிவுடை நம்பி ஆகியோர் அமைப்பாளர்களாகவும், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களாகமுத்துராமன், த.சுந்தரராசன், முனைவர் ஆறு.அழகப்பன், முனைவர் மணவை.முஸ்தபா, நா.ப.இராமசாமி, கு.பச்சைமால்,வ.வேம்பையன், மரு.வெ.குழந்தைவேலு, நாக.இரகுபதி, தமித்தஇலட்சுமி தீனதயாளன், பார்த்தசாரதி ஆகியோரும்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேற்கண்ட குழுவில் மேலும் உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் குழுவிற்கு வழங்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு:
இலங்கைத் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பெ.சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். குழுவில் உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் அமைப்பாளருக்குவழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications