ஐரோப்பிய நாடுகளுக்கு அல்-கொய்தா 1 மாதம் கெடு
துபாய்:
இராக்கில் இருந்து தங்களது படைகளை ஒரு மாதத்துக்குள் வாபஸ் பெறாவிட்டால் லண்டனில் நடந்தது போன்ற வெடிகுண்டுத்தாக்குதல்களை உங்கள் நாடுகளிலும் நடத்துவோம் என ஐரோப்பிய நாடுகளுக்கு அல்-கொய்தா கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு இது இறுதி எச்சரிக்கை. மெசபடோமியாவில் (இராக்) இருந்து உங்கள் நாட்டு வீரர்களை ஒருமாதத்துக்குள் திரும்பப் பெற வேண்டும் என கெடு விதிக்கிறோம். ஆகஸ்ட் 15ம் தேதியுடன் இந்த கெடு முடியும். அதற்குப் பின்எச்சரிக்கை எல்லாம் விட மாட்டோம்.
எங்கள் தாக்குதல்களை அரங்கேற்றுவோம். ஐரோப்பாவின் இதயத்தில் எங்கள் தாக்குதல் இருக்கும். பிரிட்டன், இத்தாலி,டென்மார்க், நெதர்லாந்து ஆகியவை உள்பட எங்கள் மண்ணில் படைகளை நிறுத்தியிருக்கும் நாடுகளுக்கு நாங்கள் விடுக்கும்கடும் எச்சரிக்கை இது.
ஸ்பெயின் ரயிலிலும், லண்டன் ரயில், பஸ்களிலும் நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம். ஒரு மாதத்தில் ஐரோப்பாவைமீண்டும் தாக்குவோம் என்று கூறப்பட்டுள்ளது.