ராஜகோபால் மீதான வழக்கு: ஜீவஜோதிக்கு பிடிவாரண்ட்
திருத்துறைப்பூண்டி:
ஜீவஜோதியைக் கடத்தியதாக சரவண பவன் அதிபர் ராஜகோபால் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில்ஆஜராகாத ஜீவஜோதி உள்பட 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் உத்தரவை திருத்துறைப்பூண்டிநீதிமன்றம் பிறப்பித்தது.
கடந்த 6ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இன்றைய தினம்நீதிமன்றத்தில் ஆஜராவதாக ஜீவஜோதி, அவரது தந்தை, தாயார் உள்ளிட்ட 4 பேர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்திருந்தனர்.
இந் நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ராஜகோபால் உள்ளிட்டோர் மட்டுமே வந்திருந்தனர்.
ஜீவஜோதி குடும்பத்தினர் யாரும் வரவில்லை. இதையடுத்து வழக்கை வரும் ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகாந்திராஜ், ஜீவஜோதி உள்ளிட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கூறி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.