For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜகோபால் மீதான வழக்கு: ஜீவஜோதிக்கு பிடிவாரண்ட்

By Staff
Google Oneindia Tamil News

திருத்துறைப்பூண்டி:

ஜீவஜோதியைக் கடத்தியதாக சரவண பவன் அதிபர் ராஜகோபால் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில்ஆஜராகாத ஜீவஜோதி உள்பட 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் உத்தரவை திருத்துறைப்பூண்டிநீதிமன்றம் பிறப்பித்தது.

நாகை மாவட்டம் தோத்தாக்குடி கிராமத்தில் உள்ள ஜீவஜோதியின் வீட்டுக்குச் சென்று அவரை காரில் கடத்த முயன்றதாகராஜகோபால், அவரது வழக்கறிஞர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு திருத்துறைப்பூண்டிநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

கடந்த 6ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இன்றைய தினம்நீதிமன்றத்தில் ஆஜராவதாக ஜீவஜோதி, அவரது தந்தை, தாயார் உள்ளிட்ட 4 பேர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்திருந்தனர்.

இந் நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ராஜகோபால் உள்ளிட்டோர் மட்டுமே வந்திருந்தனர்.

ஜீவஜோதி குடும்பத்தினர் யாரும் வரவில்லை. இதையடுத்து வழக்கை வரும் ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகாந்திராஜ், ஜீவஜோதி உள்ளிட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கூறி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X