சேரன் எக்ஸ்பிரஸ்: தீக்குளித்தவர் சாயப்பட்டறை தொழிலாளி?
கோவை:
கோவை சேரன் எக்ஸ்பிரஸ் ரயலில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டவர் திருப்பூரைச் சேர்ந்த சாயப் பட்டறைத்தொழிலாளியாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
சென்னையிலிருந்து கோவை சென்ற சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் இருகூர் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றபோது, ரயிலின்கடைசிப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெட்டிகள் தீயில் கருகின.
இந்த விபத்தில் கழிப்பறையில் இருந்த ஒருவர் உயிரோடு எரிந்து சாம்பலானார். அவர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட காரணத்தால்தான் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது என்று விசாரைணயில் தெரிய வந்தது.
அவர் தீவிரவாதியா அல்லது வேறு ஏதாவது மன வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டவரா என்பது குறித்து பலகோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவரிடமிருந்து 8 தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், அவற்றை வைத்து அவரை அடையாளம் காண முயற்சி நடந்துவருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் இறந்த நபர் திருப்பூரைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. கிடைத்துள்ளதடயங்களின் அடிப்படையில் அவர் திருப்பூர் சாயப்பட்டறை தொழிற்சாலையில் பணியாற்றி வந்திருக்கக் கூடும் என்றும்சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து திருப்பூர் மற்றும் ஈரோட்டில் 600க்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகள் அதிரடியாகமூடப்பட்டன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
அவர்களில் ஒருவராக இறந்த நபர் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய ஊர்களில் அந்த நபர் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
10 நாட்களில் விசாரணை அறிக்கை:
இந்த ரயில் தீ சம்பம் குறித்து தென்னக ரயில்வேயின் பாதுகாப்புப் பிரிவு ஆணையர் பிரணாப் குமார் சென் தனியாக விசாரணைநடத்தி வருகிறார்.
இன்று எரிந்து போன பெட்டிகளை பார்வையிட்ட அவர், இச் சம்பவம் குறித்து 10 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்என்றும் 2 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கலாகும் என்றார்.












Click it and Unblock the Notifications