காவிரி: அதிமுக போராட்டம்- கர்நாடக முதல்வர் கொடும்பாவியை எரிக்க முயற்சி
சென்னை:
கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்றுத் தராத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மத்திய அரசுஅலுவலகங்கள் முன்பு அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி மாநிலம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் சுங்கத் துறை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் விசாலாட்சிநெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். குடிசை மாற்று வாரியத் தலைவர் பாலகங்கா, தென் சென்னை மாவட்ட செயலாளர்ஆதி ராஜாராம் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோவையில் கர்நாடக முதல்வர் தரம்சிங்கின் உருவப் பொம்மையை எரிக்க முயன்ற அதிமுகவினரை போலீசார்அப்புறப்படுத்தினர். பஸ் நிலையம் அருகே கொடும்பாவியுடன் வந்த அதிமுகவினரிடம் இருந்து அதை போலீசார் பறிமுதல்செய்தனர். பின்னர் அதிமுகவினரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
தமிழகம் முழுவதும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications