வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேச தடை
சென்னை:
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் நடராஜ் எச்சரித்துள்ளார்.
விபத்துக்களை குறைக்க போக்குவரத்து போலீஸார் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டுகுடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சுமார் 30,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை விபத்தில் சிக்கி 300 பேர் இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விடக்குறைவு தான். ஆனாலும்விபத்தை குறைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். சாலை விதிகளை அனைவரும் கடைப்பிடித்தால் விபத்துக்களைகுறைக்கலாம்.
வாகனம் ஓட்டுபவர்கள் செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவதால் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. இனிமேல்செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இரு சக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் செல்லக்கூடாது. மீறி சென்றால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.லைசன்ஸும் ரத்து செய்யப்படும்.
சென்னையில் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை. ஆனாலும் போலீஸார் மாறுவேடங்களில் முக்கிய இடங்களில்தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுஎன்றார்.












Click it and Unblock the Notifications