For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக்: பிரதமருக்கு ஜெ. கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சமையல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு போராட்டத்தைமுடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாடு முழுவதும் நடந்து வரும் சமையல் கேஸ் டேங்கர் லாரிகள்வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் காரணமாக மொத்தம் உள்ள 16 கேஸ் நிரப்பும் நிலையங்களில் 13 நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. இதனால்தமிழகம் முழுவதும் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம்ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 50 லட்சம் வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்புகள் உள்ளன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக 50 லட்சம்குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

தற்போதைய வேலை நிறுத்தத்திற்கு, எண்ணை நிறுவனங்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு இடையிலான ஊதிய ஒப்பந்தவிவகாரம் தான் காரணம்.

எனவே இந்தப் பிரச்சினையில் உடனடியாக தாங்கள் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இதுமிகவும் அவசரமாகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X