For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரோடு: இலங்கை அகதிகள் முகாம்களில் போலீஸார் சோதனை

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

ஈரோட்டில் 3 இலங்கை அகதிகள் முகாமில் இன்று அதிகாலை போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.

ஈரோடு மாவட்டத்தில் பவானி சாகர், அரசலூர், ஈச்சம்பள்ளி ஆகிய 3 இடங்களில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளன. இதில்பவானி சாகரில் 2,400 பேரும், அரச்சலூரில் 450 பேரும், ஈச்சம்பள்ளியில் 571 பேரும் தங்கியுள்ளனர்.

இந்த முகாம்களில் கடந்த மாதம் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அனுமதிக்கப்பட்டவர்ளை விட கூடுதல்நபர்கள் முகாம்களில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அனுமதிக்கப்பட்டவர்களை விட கூடுதலாக யாரும்தங்கக்கூடாது என்று போலீஸார் எச்சரித்தனர்.

இந் நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் ஈரோடு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உத்தரவின்பேரில் 3 முகாம்களிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு முகாம்களிலும் சுமார் 50 போலீஸார் இந்த சோதனையில்ஈடுபட்டனர்.

முகாம்களில் குறிப்பிட்டவர்களைத் தவிர கூடுதலாக யாராவது தங்கியிருக்கிறார்களா, புதியவர்கள் யாராவது முகாம்களுக்குவந்து செல்கிறார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

போலீஸாருடன் வருவாய்த்துறை அதிகாரிகளும் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய இந்தசோதனை காலை 9 மணி வரை 5 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X