லண்டன்: இந்திய பெட்டிகளில் வந்த குண்டுகள்

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

கடந்த வாரம் லண்டனில் நடந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பெட்டிகளில்வைத்து கொண்டு வரப்பட்டுள்ளது என்று லண்டன் போலீஸார் கூறியுள்ளனர்.

கடந்த 7ம் தேதி லண்டனில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பில் 56 பேர் பலியானார்கள். இதனால்லண்டன் நகரமே பீதியில் உறைந்தது.

இந் நிலையில் கடந்த வாரம் மீண்டும் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர்ச் சேதம் எதுவும்ஏற்படவில்லை. இந்த குண்டு வெடிப்பு குறித்து லண்டன் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் கடந்த வாரம் நடந்த தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டபெட்டிகளில் வைத்து லண்டன் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லண்டன் நகர துணை போலீஸ் கமிஷனர் பீட்டர் கிளார்க் கூறுகையில், கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குபயன்படுத்தப்பட்ட 5 வெடிகுண்டுகளும் டப்பர்வேர் எனப்படும் வெள்ளை நிற மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பெட்டிகளில்கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தப் பெட்டிகள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இது போல இந்தியாவில் தயாரான ஏராளமானபெட்டிகள் இங்கிலாந்தில் சுமார் 100 கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பெட்டிகளை யார் வாங்கினார்கள் என்பது குறித்து நாங்கள் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+