சிவகாசியில் மீண்டும் பட்டாசு விபத்து: 10 பெண்கள் படுகாயம்
சிவகாசி:
சிவகாசி அருகே நேற்று மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பெண்கள் படுகாயம்அடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந் நிலையில் நேற்று சிவகாசி அருகே அருக்கன்குளம் என்ற இடத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்துஏற்பட்டது. அருக்கன்குளம் பகுதியில் உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
இதில் தொழிற்சாலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் 10 பெண்கள் படுகாயம்அடைந்தனர். அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.
சிவகாசி பகுதியில் அடுத்தடுத்து பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துக்கள் நடப்பது தொழிலாளர்கள் மத்தியிலும்,பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசுத் தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.












Click it and Unblock the Notifications