சொத்துக் குவிப்பு வழக்கு: தன்னையும் விடுவிக்க கோருகிறார் தினகரன்
திருப்பூர்:
திருப்பூரில் சாயப்பட்டறைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள விவகாரத்தில் தமிழக அரசு மெளனம்சாதிப்பதைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த முழுஅடைப்பு காரணமாக திருப்பூரில் இன்று இயல்பு நிலை பாதித்தது.
இந் நிலையில் இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு சாயப்பட்டறைகளுக்கு உதவ தவறி விட்டதாக சாயப்பட்டறைஅதிபர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் திருப்பூரில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின்பிரதிநிதிகள் கூடிப் பேசி திருப்பூரில் 24 மணி நேர முழு அடைப்பு நடத்துவதென முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு தொடங்கியது. முழு அடைப்பையொட்டி கடைகள், வணிகநிறுவனங்கள், தனியார்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துப் போக்குவரத்தும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள சாயப்பட்டறைகள், துணி நிறுவனங்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள்உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன. நாளை காலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு நடக்கிறது. முழுஅடைப்பையொட்டி திருப்பூர் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.