பொதுக்கூட்டத்தில் பேச பழ. நெடுமாறனுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பழ. நெடுமாறனுக்கு பொதுக்கூட்டத்தில் பேச சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில் உலகத் தமிழ் கூட்டமைப்பு சார்பில் வருகிற 30ம் தேதி நாகர்கோவிலில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில் பேச தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பழ. நெடுமாறனும், சுப. வீரபாண்டியனும் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் என். தினகர், சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அப்போதுநாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் பழ. நெடுமாறனும், சுப வீரபாண்டியனும் பங்கேற்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications