டெல்லி ரயிலில் குண்டு வெடிப்பு: 12 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சுல்தான்பூர்:

பாட்னா-டெல்லி ரயிலில் குண்டு வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்தது. 52 பேர் படுகாயங்களுடன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாட்னாவிலிருந்து டெல்லி செல்லும் ஸ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயில் உத்திரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் அருகே உள்ள ஜான்பூர்பகுதியில் சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 5.15 மணியளவில் இந்த ரயிலில் முன் பதிவு செய்யப்படாத சாதாரணகோச்சின் கழிவறையில் திடீரென்று குண்டு வெடித்தது.

இதில் 12 பேர் பலியாகி விட்டனர். 52 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக பட்லாபூர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

குண்டு வெடிப்பு நடந்த இடத்தை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பார்வையிட்டார். இந்த சம்பவம் தொடர்பாகரயில்வே பாதுகாப்பு கமிஷனர், மத்திய மற்றும் மாநில அரசுகள் விசாரணை நடத்தும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையே தன்பாத்- கயா ரயிலில் 22 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக லாலு தெரிவித்தார்.

குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்என்று உத்திரபிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+