அதிமுக உண்ணாவிரதம் ஒரு நாடகம்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரிப் பிரச்சினைக்காக அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளது கண்துடைப்பு நாடகம் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கடந்த 13ம் தேதி திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி காவிரிப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு விரைந்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்ட பிறகே இந்தப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா கண் விழித்துக்கொண்டார்.
ஜெயலலிதா பிரதமரை சந்திப்பதற்கு முன்பே திமுக கூட்டணித் தலைவர்கள் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்ததுகுறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியினர் பிரதமரிடம் மனு கொடுத்தது கண் துடைப்பு நாடகம் என்று ஜெயலலிதா கூறியிருப்பது அவரதுஆத்திரத்தையே காட்டுகிறது. உண்மையில் அதிமுகவினர் நடத்தியுள்ள உண்ணாவிரதப் போராட்டம் தான் முகம் துடைப்புநாடகம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications