For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடிகர் நாகார்ஜூனா தொழிற்சாலையில் கொள்ளை முயற்சி!

By Staff
Google Oneindia Tamil News

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான தொழிற்சாலையில் கொள்ளையடிக்கமுயன்ற கும்பலை காவலாளிகள் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் என்ற இடத்தில் உள்ள தொழிற்பேட்டையில் நடிகர் நாகார்ஜூனா ரூ. 200 கோடி மதிப்பில் புதியதொழிற்சாலை ஒன்றை கட்டி வருகிறார். இதன் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக செங்கல், இரும்புக்கம்பிகள், சிமெண்ட் மூடைகள் உள்ளிட்டவை அங்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த தொழிற்சாலைக்கு புதன்கிழமை நள்ளிரவில் ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்தது. அங்கிருந்தகட்டுமானப் பொருட்களை அக்கும்பல் கொள்ளையடிக்க முயன்றது.

இதையடுத்து அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த நேபாள கூர்க்காக்களான பஜாம், ராஜீவன் வர்மா ஆகிய இருவரும்தங்களிடமிருந்த துப்பாக்கிகளால் கொள்ளைக் கும்பலை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

இதையடுத்து கொள்ளைக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. துப்பாக்கிச் சப்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தபொதுமக்கள் விரைந்து வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தொழிற்சாலை மேலாளர் பன்னீர் செல்வம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X