For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி: பிரதமருடன் ராமதாஸ் தனி சந்திப்பு!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பிரதமர் மன்மோகன் சிங்கை தனியாக சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசுதிறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

காவிரிப் பிரச்சினை தொடர்பாக திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள்சமீபத்தில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்திற்கு சென்றுசந்தித்தார். அப்போது காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிரதமரிடம் விவாதித்தார்.

தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசு திறந்து விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்மோகன் சிங்கிடம்அப்போது ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். அதைக் கேட்டுக் கொண்ட மன்மோகன் சிங், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக ராமதாஸிடம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் ராமதாஸ் சென்று சந்தித்து இதே பிரச்சினை குறித்துப் பேசினார்.

இந்த சந்திப்புகளின் போது ராமதாஸின் மகனும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணி, ரயில்வே இணைஅமைச்சர் ஆர்.வேலு, எம்.பிக்கள் ஏ.கே.மூர்த்தி, புதுவை ராமதாஸ், பொன்னுச்சாமி, டாக்டர் தன்ராஜ், செந்தில் ஆகியோரும்உடனிருந்தனர்.

காவிரிப் பிரச்சினை தொடர்பாக ராமதாஸ் தனி அணியாக சென்று பிரதமரையும், சோனியாவையும் சந்தித்துள்ளது திமுகவட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X