காவிரி: மத்திய அரசிடம் உறுதி வேண்டும் - வைகோ
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசிடம், மத்திய அரசு உறுதியாக வலியுறுத்த வேண்டும்என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நடுவர் மன்றங்களின் தீர்ப்புகளை அமல்படுத்தும் அதிகாரம் மாநிலஅரசுகளிடம் இருப்பதை விட மத்திய அரசிடமே இருக்க வேண்டும். அப்போது தான் காவிரி பிரச்சினை போன்றவற்றில் ஒருதரப்பு கடுமையாக பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியும். இதற்காக சட்டத் திருத்தம் கூட கொண்டு வரலாம்.கர்நாடக அரசின் தாமதம் காரணமாக தமிழக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளால் சரியாக மகசூல் பெற முடியாத நிலைஏற்பட்டுள்ளது. எனவே கர்நாடகம் விரைவாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என அம்மாநில அரசை மத்திய அரசுஉறுதியுடன் வலியுறுத்த வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா பிரதமரை சந்தித்த போது தனது கண்டனத்தைத் தெரிவிக்காமல் சென்னைக்கு வந்த பிறகு பிரதமரைகுறை கூறிப் பேசுகிறார், உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிக்கிறார்.
அதை ஏன் அவர் டெல்லியில் செய்யவில்லை? இன்னும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாதது ஏன் என்பதையும் அவர்விளக்க வேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications