For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி முத்திரைத்தாள்: டிஜிபி பதவி நீக்கம்: ஐஜி சஸ்பெண்ட்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போலி முத்திரைத் தாள் மோசடியில் தொடர்புடைய சிபிசிஐடி கூடுதல் டிஜிபி அமித் வர்மா அப்பொறுப்பிலிருந்துமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதே போல ரயில்வே ஐ.ஜிராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவையே உலுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் போலி முத்திரைத்தாள் மோசடி விவகாரம் தமிழகத்திலும்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி உள்ளிட்ட 2காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் தற்போது தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர மதுரையைச் சேர்ந்த எல்.ஐ.சி.அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந் நிலையில் போலி முத்திரைத் தாள் விவகாரத்தில் மேலும் சில காவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் தொடர்புஇருப்பதாக செய்திகள் வெளியாகின. அவர்களில் முக்கியமானவர் அமித் வர்மா. சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாகதற்போது அமித் வர்மா உள்ளார்.

அவரை சிபிஐ கூட விசாரித்தது. ஆனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது தமிழக அரசு.

இந் நிலையில் அமித் வர்மா மீது இப்போது திடீரென நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கூடுதல் டிஜிபிபொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேபோல ரயில்வே ஐஜியாக இருந்து வந்த ராதாகிருஷ்ணனும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இவருக்கும் போலி முத்திரைத் தாள் மோசடியில் தொடர்பு உள்ளதாகத் தெரிகிறது.

இவர்கள் தவிர டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஒருவருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாகவும்விரைவில் அவர் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X