For Daily Alerts
Just In
ஏறியது போதை; மாறினார் மைக் டைசனாக, கடித்துத் துப்பினார் காதை!
சென்னை:
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனாரின் காதை கடித்துத் துப்பிய இன்னொரு கொத்தனாரை போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஒரு கொத்தனார். இவருக்கும் சக கொத்தனாரான மூர்த்தி என்பவருக்கும்முன்விரோதம் இருந்து வந்தது.இந் நிலையில், இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி இருவரும்அடிதடியில் இறங்கினர். இதில் கோபத்தின் உச்சிக்குச் சென்ற முருகன், மூர்த்தியின் வலது காதைப் பிடித்து கடித்தார்.
இதில் காதின் ஒரு பகுதி பிய்ந்து போனது. பிய்த்து எடுத்த பகுதியை துப்பி விட்டு முருகன் அங்கிருந்து தப்பினார். பிய்ந்தகாதுடன் மூர்த்தி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்குக் கொண்டு போகப்பட்டார். முருகனை போலீஸார் கைது செய்தனர்.
Story first published: Monday, August 1, 2005, 5:30 [IST]