For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடிட்டர் வழக்கு: 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் வருகிற 11ம் தேதி அப்ரூவர் ராதாகிருஷ்ணனிடம் அரசுத் தரப்பில்விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு இன்று சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது இரு சங்கராச்சாரியார்களும் ஆஜராகவில்லை. சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், விஜயேந்திரரின் தம்பி ரகு,அப்பு, கதிரவன் உள்ளிட்ட 11 பேர் ஆஜராகியிருந்தார்கள்.

இரு சங்கராச்சாரியார்களும் திருப்பதியில், சதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டிருப்பதால் அவர்களால் வர இயலவில்லை என்றுகூறி அவர்களின் வழக்கறிஞர் தினகர் மனு தாக்கல் செய்தார். அதை நீதிபதி உமா மகேஸ்வரி ஏற்றுக் கொண்டார்.

பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அப்போது அப்ரூவர் ரவிசுப்ரமணியத்திடம் அரசுத்தரப்பு வழக்கறிஞர் விசாரணை நடத்துவார் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X