இட ஒதுக்கீடு: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர்மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்மக்களின் இட ஒதுக்கீடு மசோதா 2004ம் ஆண்டில் லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இட ஓதுக்கீடு மசோதாவை அறிமுகம்செய்தது. ஆனால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.எஸ், ஐ.ஐ.எம்.எஸ்., மற்றும் சட்டப் பல்கலைக் கழகங்களில்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வில்லை.
தேவைப்பட்டால் இட ஒதுக்கீடு மசோதாவை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயன் அடையும் வகையில் மாற்றி அமைக்கவேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீடுசெய்யப்பட வேண்டும்.
அதற்காக, சமூக நீதி கொள்கை அடிப்படையில் திமுக போராடி வருகிறது. இது திமுக வின் தேர்தல் வாக்குறுதியாகும். அரசுஉதவி பெற்று நடத்தப்படும் தனியார் நிறுவனங்களிலும் அரசின் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுகுறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும், மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் மீராகுமார்ஆகியோருக்கும் கருணாநிதி அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications