இந்தியாவிடமிருந்து வாடகைக்கு ஹெலிகாப்டர் வாங்கும் இலங்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை விமானப் படை இந்தியாவிடமிருந்து இரண்டு எம்ஐ-26 ரக ஹெலிகாப்டர்களை குத்தகைக்கு கேட்டுள்ளது என்றுஇலங்கை விமானப் படை தலைவர் டோனல் பெரைரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து டோனல் பெரைரா கூறுகையில், ஒரு அரசு இன்னொரு நாட்டு அரசிடம் கேட்கும் உதவியின் அடிப்படையில்போக்குவரத்துக்குப் பயன்படும் அதிக சுமை ஏற்றிச் செல்லக்கூடிய எம்ஐ- 26 ரக ஹெலிகாப்டர்களை வாடகைக்குகேட்டுள்ளோம்.இதன் மூலம் கொழும்புக்கும், சீரமைப்புப் பணிகள் நடைபெறும் பலாலிக்கும் இடையே 750 ராணுவ வீரர்களை தினமும் ஏற்றிச்செல்ல முடியும்.
பலாலி விமான தளத்தில் பழுது பார்க்கும் பணி முடியும் வரையில் அங்கு விமானங்களை கொண்டு செல்ல முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications