திருச்சி- கொழும்பு விமானம்: ஏர் சஹாரா அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி- கொழும்பு இடையே நவம்பர் மாதம் முதல் விமானம் இயக்கப்படும் என்று ஏர் சஹாரா நிறுவன அதிகாரி திருச்சியில்தெரிவித்தார்.

திருச்சியில் ஏர் சஹாரா விமான நிறுவனத்தின் அலுவலக திறப்பு விழா இன்று நடந்தது. இதில் ஏர் சஹாரா நிறுவனத்தின்முதுநிலை துணைத் தலைவர் தாமோதரன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், சஹாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது 23 நகரங்களுக்கு விமான சேவையைநடத்தி வருகிறது. சென்னை- கொழும்பு இடையே செல்லும் விமானம் கொழும்பில் சுமார் 4 மணி நேரம் நிற்கிறது.

இந்த இடைப்பட்ட நேரத்தைப் பயன்படுத்தி கொழும்பு- திருச்சி இடையே சர்வீஸ் நடத்த முடிவு செய்துள்ளோம். வருகிறநவம்பர் மாத இறுதிக்குள் திருச்சியில் இருந்து கொழும்பிற்கு விமானம் இயக்கப்படும்.

திருச்சியில் இருந்து கொழும்பிற்கு ஏற்கனவே ஏர் லங்கா சேவையை நடத்தி வந்தாலும் எங்களது சேவைக்கு மக்களிடம் நல்லவரவேற்பு இருக்கும் என்று கருதுகிறோம். மேலும் சென்னை- கோலாலம்பூர் இடையே அடுத்த (செப்டம்பர்) மாதம் முதல்விமானம் இயக்க உள்ளோம்.

இதே போன்று டெல்லியில் இருந்து லண்டன், சிகாகோ ஆகிய நகரங்களுக்கும் நவம்பர் மாதம் முதல் சர்வீஸ் நடத்ததீர்மானித்துள்ளோம். இதற்காக கூடுதலாக 14 விமானங்களை குத்தகைக்கு எடுக்க உள்ளோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+