39 தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
சென்னை:
சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 39 சட்டசபைத் தொகுதிகளின் வரைவுவாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி,சேலம், திருநெல்வேலி ஆகிய 6 மாநகராட்சிப் பகுதிகளில் அடங்கியுள்ள தொகுதிகள்,சென்னை எம்.பி. தொகுதிகளுக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி சட்டசபைத் தொகுதிகள் ஆகியவற்றில்முதல் கட்டமாக வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. இதையடுத்து இந்த 39 தொகுதிகளின் வரைவுவாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
பெயர் சேர்ப்பது, நீக்கம் செய்வது உள்ளிட்ட திருத்தங்கள் இருந்தால் வருகிற 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர் இறுதிப் பட்டியல் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்படும்.
சென்னை மாநகராட்சி அலுவலகம், தபால் நிலையங்கள், வாக்குச் சாவடிகள், நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில்வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருக்கும்.
இம்மாதம் 16ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பட்டியலை பொதுமக்கள் பார்வையிடலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications