ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டது. இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணியளவில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல புறப்பட்டு சென்றது. இன்றுஅதிகாலை 4 மணியளவில் தர்மபுரி, சேலம் இடையே சென்று கொண்டிருந்தது.லோகூர் என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது ரயிலின் இரண்டாவது பெட்டி எதிர்பாராதவிதமாக தடம்புரண்டது. இது குறித்து அறிந்ததும் ரயில்வே அதிகாரிகளும், மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை. இந்த விபத்து காரணமாக அந்த ரயில் பாதையில் போக்குவரத்துதடைபட்டுள்ளது. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்றே போக்குவரத்து சீரமைக்கப்பட்டு விடும் என்று பாலக்காடு கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் சிவானந்தம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications