சிவராஜ் பாட்டீல் "ஆப்சென்ட்: அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர்
டெல்லி:
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து விளக்கமளிக்க உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்வராததால் அவையை சபாநாயகர் சிறிது நேரம் ஒத்திவைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் மாநிலத்தில் மாணவர்கள் மற்றும் அரசுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையால் உருவாகியுள்ளபொருளாதார நெருக்கடி குறித்து இன்று விவாதம் நடைபெற்றது.அம்மாநிலத்தில் மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு மத்தியஅரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து விளக்கமளிக்க உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிஉத்தரவிட்டார். ஆனால் அப்போது சிவராஜ் பாட்டீல் அவையில் இல்லை.
இதனால் கோபமடைந்த சோம்நாத் சாட்டர்ஜி, இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை என்னால் அனுமதிக்க முடியாது. எனவேஅவையை 10 நிமிடம் ஒத்தி வைப்பதாக அறிவித்தார். உடனே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சியினரைப் பார்த்துவெட்கம், வெட்கம் என்று கோஷமிட்டனர்.
உள்துறை அமைச்சர் அவையில் இல்லாததால் அவையை சபாநாயகர் ஒத்திவைத்த சம்பவம் லோக் சபாவில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.
இதன் பிறகு அவைக்கு வந்த சிவராஜ் பாட்டீல், மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும், மாநில அமைச்சர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications