வேலூர் திமுக மாநாடு: ஏற்பாடுகள் தீவிரம்
வேலூர்:
வேலூரில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள திமுக மண்டல மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுபேசுகிறார்கள்.
வேலூர், திருவண்ணாமலை தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை இணைத்து நடத்தப்படும் வேலூர் மண்டல திமுகமாநாடு வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் வேலூரில் நடைபெறுகிறது.இதையொட்டி மாநாட்டுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பந்தல் அமைக்கும் பணியில் 100 தொழிலாளர்கள்ஈடுபட்டுள்ளனர். சுமார் 900 அடி நீளத்திலும், 700 அடி அகலத்திலும் பந்தல் போடப்படுகிறது. இந்த பந்தல் எளிதில்தீப்பிடிக்காத வகையில் அமைக்கப்படுகிறது.
மழை பெய்தால் ஒழுகாத அளவிற்கு பந்தலின் மேற்கூரையில் இரும்புத் தகடுகள் அமைக்கப்படுகின்றன. பந்தலில் தஞ்சாவூர்கலை நுணுக்கத்தோடு அலங்கார வேலைப்பாடுகளும் செய்யப்படுகின்றன.
மேடையில் கான்கிரீட் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. கருணாநிதி மேடைக்கு காரிலேயே சென்று இறங்கும்வகையில் சரிவுப் பாதை அமைக்கப்படுகிறது.
கோட்டை நுழைவு வாயில் போன்று மாநாட்டின் முகப்பு அமைக்கப்படுகிறது. நுழைவு வாயிலின் மத்தியில் 50 அடி உயரமுள்ளதிருவள்ளுவர் சிலை அமைக்கப்படுகிறது.