வீரப் பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருது: ஜெ. வழங்குகிறார்
சென்னை:
சுதந்திர தின நிகழ்ச்சிகளின்போது வீரச் செயல் புரிந்த பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருதை முதல்வர் ஜெயலலிதாவழங்கவுள்ளார்.
சுதந்திரதினத்தையொட்டி சென்னையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமை காலை புனித ஜார்ஜ்கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினஉரையாற்றுகிறார் ஜெயலலிதா.அதன் பின்னர் காவலர் அணிவகுப்பு, பல்வேறு துறையினரின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு ஆகியவற்றைப்பார்வையிடுகிறார். மேலும், வீரச் செயல் புரிந்த பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருதும் வழங்கப்படுகிறது. விருது பெறும்பெண்ணின் பெயர் நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்படும்.
இதுதவிர ஊனமுற்றோர் நலனுக்காக பாடுபட்டவருக்கான விருது, மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது, கிராமச்சுகாதார மேம்பாட்டுக்கான விருது, தூய்மையான கிராம இயக்க விருது உள்ளிட்டவற்றையும் அவர் வழங்குகிறார்.
அத்துடன் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் விழாவின்போது ஜெயலலிதா வழங்குகிறார்.
கோட்டை முன் உள்ள புல்வெளியில் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், முக்கியஅழைப்பாளர்கள் அமர்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் மிக பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 10,000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications