ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்: கங்குலி மீண்டும் கேப்டன்
ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு கேப்டனாக கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்திருந்த போது ஒரு போட்டியில் இந்திய அணி தாமதமாக பந்து வீசியதாக கூறிசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கேப்டன் கங்குலிக்கு 6 போட்டிகளில் விளையாட தடை விதித்தது.கங்குலிக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது.ஆனால் முதலில் அதை ஏற்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மறுத்து விட்டது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டிக்கு திராவிட் கேப்டனாகநியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் கங்குலி மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு மீண்டும் ஐசிசிக்கு கோரிக்கைவிடுத்தது. இதை ஏற்றுக் கொண்ட ஐசிசி, கங்குலி மீதான தடையை 6 போட்டிகளிலிருந்து 2 போட்டிகளாக குறைத்தது.
இதைத் தொடர்ந்து இலங்கையில் இந்திய அணி கலந்து கொண்ட 3வது போட்டியிலிருந்து கங்குலி மீண்டும் விளையாடதொடங்கினார்.
இந் நிலையில் இம்மாத இறுதியில் இந்திய அணி ஜிம்பாப்வே செல்கிறது. இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்தியஅணியின் கேப்டனாக கங்குலி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தப் போட்டியில் விளையாடவுள்ளமற்ற வீரர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications