லட்சுமண் கதிர்காமர் சுட்டுக் கொலை: இலங்கையில் நெருக்கடி நிலை பிரகடனம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா பிரகடனப்படுத்தியுள்ளார்.

Kadirgamarகொலையாளிகளைப் பிடிக்க கொழும்பு நகரில் வீடு வீடாக சோதனை நடத்தப்படவுள்ளது. இதையடுத்து வீடுகளை விட்டுபொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

73 வயதான கதிர்காமர் சந்திரிகாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்து வந்தார். விடுதலைப் புலிகளை மிகக் கடுமையாகஎதிர்த்து வந்த கதிர்காமர் நேற்றிரவு நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டுவிட்டு தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

இரவு 10.30 மணியளவில் கொழும்பில் மிகப் பாதுகாப்பான பகுதியான லண்டன் பாலசையடுத்த விஜேரம மாவட்டேயில்உள்ள தனது வீட்டுக்கு அருகே வைத்து சுடப்பட்டார். இதில் அவரது தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்தன.

இதையடுத்து அவர் உடனடியாக தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் குழுஉடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு குண்டுகளை அகற்ற முற்பட்டது.

ஆனால், சுமார் ஒன்னேகால் மணி நேர அறுவை சிகிச்சை பலனளிக்காமல் அவர் நள்ளிரவு 12.15 மணியளவில் இறந்தார்.

கொலை நடந்த சாலைக்கு வெகு தூரத்தில் இருந்தபடி சரியாக குறி பார்த்து சுடும் நபர் (ஸ்னைபர்) தான் கதிர்காமரை கொலைசெய்துள்ளார். கொலையை அடுத்து ராணுவ ஹெலிகாப்டர்கள் உதவியுடன் கொலையாளிகள் தேடுதல் வேட்டை நடந்தது.ஆனால், யாரும் பிடிபடவில்லை.

அவரது கொலையையடுத்து நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அதிபர் சந்திரிகா பிரகடனப்படுத்தியுள்ளார்.

இந்தக் கொலைக்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தயா ரத்னயாகேகுற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இந்தக் கொலைக்கு புலிகள் பொறுப்பேற்கவில்லை.

கிருஸ்துவத் தமிழரான கதிர்காமர், யாழ்பாணத்தைச் சேர்ந்வர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். கடந்த முறைசந்திரிகா அதிபராக இருந்தபோதும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த ஆண்டு மீண்டும் அமைச்சரானார்.

தொடர்ந்து விடுதலைப் புலிகளை எதிர்த்து வந்த கதிர்காமர், பல நாடுகளில் புலிகள் அமைப்பு தடை செய்யப்படவும் முக்கியகாரணமாக இருந்தார்.

இதற்கிடையே காலக் கெடு ஏதும் இல்லாமல் நாடு முழுவதும் அவரச கால நிலையை சந்திரிகா பிறப்பித்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்து விசாரிக்க முடியும்.

பலத்த பாதுகாப்புடன் செயல்பட்டு வந்த கதிர்காமரின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும், மேலும் 100 கமாண்டோக்களைஅவரது பாதுகாப்புக்காக நியமிக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டிருந்தது. இந் நிலையில் இந்தக் கொலை நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+