40 லட்சம் புதிய பிஎஸ்என்எல் மொபைல் போன் இணைப்புகள்: மாறன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பிஎஸ்என்எல் சார்பில் 40 லட்சம் புதிய மொபைல் போன் இணைப்புகள்வழங்கப்படவுள்ளன.
இதற்கான பிரமாண்ட விழா வரும் புதன்கிழமை சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடக்கிறது. இதில்கர்நாடக முதல்வர் தரம் சிங், பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன்,மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.இது குறிக்கு மாறன் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகம், கர்நாடகம், பாண்டிச்சேரி, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இந்த 40 லட்சம் இணைப்புகளும் பகிர்ந்துஅளிக்கப்படும். பிஎஸ்என்எல் மொபைல் இணைப்புகளைப் பெற நாடு முழுவதும் பெரும் போட்டி நிலவுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications