சேது சமுத்திர திட்டம்: இலங்கையின் கவலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சேது சமுத்திரத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என இந்தியாவிடம் இலங்கை கவலை தெரிவித்துள்ளதாகவெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமத் தெரிவித்தார்.
மக்களவையில் பேசிய அவர்,
சேது சமுத்திரத் திட்டத்தால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சில பிரச்சனைகளை இலங்கை கிளப்பியுள்ளது.இதையடுத்து இத் திட்டத்தின் சுற்றுச் சூழல் தாக்கம் குறித்த விவரங்களை அந் நாட்டுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் விவரங்களைப் பெற இலங்கை அரசின் நிபுணர்கள் குழு இரண்டு முறை இந்தியா வந்து சென்றுள்ளனர்.அவர்களுடன் சுற்றுச்சூழல் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications