மோடியை பாராட்ட வார்த்தைகளே இல்லை: அத்வானி
பதான்:
குஜராத்தில் பாஜகவை வலுப்படுத்தியவர் நரேந்திர மோடி என அத்வானி மீண்டும் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
மோடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் தலைமையிலான எம்எல்ஏக்களும்எம்பிக்களும் குஜராத்தில் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். படேலின் வீட்டில் 30க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் கூடிப் பேசிவருகின்றனர்.டெல்லிக்கு வந்த படேல் அத்வானியை சந்திக்காமல் மாஜி பிரதமர் வாஜ்பாயை சந்தித்து மோடியை மாற்ற வேண்டும் என்றுகோரிக்கை வைத்தார். கட்சியில் அத்வானியை மீறி முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க முடியாத நிலையில் உள்ள வாஜ்பாய்,எந்த உறுதிமொழியும் தராமல் படலை திருப்பி ஊருக்கு அனுப்பி வைத்தார்.
இந் நிலையில் மோடிக்கு எதிராக முன்னாள் டெல்லி முதல்வரும் மூத்த பாஜக தலைவர்களில் ஒருவருமான மதன்லால்குரானாவும் குரல் கொடுக்க ஆரம்பித்தார். அத்வானியை தலைவராக ஏற்க முடியாது என்று கூறி சில வாரங்களுக்கு முன்பரபரப்பை ஏற்படுத்திய குரானா இம்முறை அத்வானியோடு மோடியும் பதவி விலக வேண்டும் என்றார்.
ராஜிவ் மரணத்தைத் தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் செய்ததாக காங்கிரஸார் மீது குற்றம் சாட்டி பாஜகபோராட்டம் நடத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறிய குரானா, மதக் கலவரத்தை முன்னின்று நடத்தி பல உயிர்கள்பலியாகக் காரணமாக இருந்த மோடியை முதலில் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
மோடிக்கு பல தரப்பில் இருந்து ஆபத்து வந்ததை உணர்ந்த அத்வானி குஜராத் விரைந்தார். அங்கு மூத்த தலைவர்களுடன்ஆலோசனை நடத்திய அத்வானி, மோடி அரசைப் பாராட்டினார்.
மேலும் மோடிக்கு முழு ஆதரவைத் தெரிவித்த அவர் அவரை பதவி நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார். இந் நிலையில்இன்று பொதுக் கூட்டத்தில் பேசிய அத்வானி,
குஜராத்தில் பாஜகவை வலுப்படுத்திய தலைவர் மோடி தான். அவரால் தான் இன்று மாநிலத்தில் கட்சி மிகவும் வலுவாக உள்ளது.அவர் மிக மிக நேர்மையாகவும், மக்களுக்கு உதவும் வகையிலும் அரசை நடத்தி வருகிறார்.
நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வரும் மோடியையும் அவரது அமைச்சர்களையும் பாராட்டஎன்னிடம் வார்த்தைகள் இல்லை.
இதே வேகத்தில் மோடியின் அரசு செயல்பட்டால் நாட்டுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே ஒரு உதாரணமாக குஜராத் இருக்கும்என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications