ஜெயலட்சுமி மீதான விபச்சார வழக்கு: 4 போலீஸ் அதிகாரிகள் விடுதலை!
திருநெல்வேலி:
டி.எஸ்.பி. ராஜசேகரின் தூண்டுதலின் பேரில், ஜெயலட்சுமி மீது பொய்யாக விபச்சார வழக்குப் போட்டு கைது செய்யதாகநெல்லை போலீஸார் மீது சிபிஐ தொடர்ந்த வழக்கை திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜெயலட்சுமி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், டி.எஸ்.பி. ராஜசேகர் தூண்டுதலின்பேரில், நெல்லை இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் விக்னேஸ்வரன், சண்முகவேல் ஆகியோர் தன் மீதுவிபச்சார வழக்குப் போட்ட கைது செய்ததாக புகார் கூறியிருந்தார்.இந்தப் புகாரை விசாரிக்குமாறு சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணையின்அடிப்படையில் நெல்லை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில், ராஜசேகர், ஜான் ரோஸ், விக்னேஸ்வரன், சண்முகவேல் ஆகியோர்மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவதானு, நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் போதிய ஆதாரம் இல்லை என்று கூறிஅவர்களை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
இதன் மூலம் 4 காவல்துறை அதிகாரிகளும் விடுதலை ஆகியுள்ளனர். ஜெயலட்சுமி தொடர்பான வழக்கு ஒன்றில்வழங்கப்பட்டிருக்கும் முதல் தீர்ப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications