புலிகளுடன் விரைவில் பேச்சு: இலங்கை அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையில் விரைவில் விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் எனஇலங்கை வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சர் முத்து சிவலிங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முத்து சிவலிங்கம் சென்னை வழியாக இலங்கை திரும்பினார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கிப் போய் விடவில்லை. விரைவில் அதை மீண்டும் தொடங்க வேண்டியசூழ்நிலையில் அரசு உள்ளது. லட்சுமண் கதிர்காமர் படுகொலை சம்பவத்தால் அமைதிப் பேச்சுவார்த்தையில் பாதிப்பு ஏற்படாது.தொடர்ந்து அது நடக்கும்.
விரைவிலேயே பேச்சுவார்த்தையை தொடங்க இரு தரப்பினரும் தயாராகவே உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications