சுனாமி நிதி முறைகேடு: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
சென்னை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனம் கிராமத்தில் சுனாமி நிவாரண நிதியில் முறைகேடு நடந்ததாககூறப்படும் புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புஷ்பவனம் கிராமம் கடந்த சுனாமி அலைத் தாக்குதலில் பெரும் சேத்தைத் சந்தித்தது. இக்கிராமத்தைச் சேர்ந்த 1805 பேர்கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சுனாமி நிவாரண நிதி சரியாக வினியோகிக்கப்படவில்லை.இதுதொடர்பாக இக்கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கோவிந்தராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார். அதில், புஷ்பவனம் கிராமத்தில் சுனாமி நிதி சரிவர வினியோகிக்கப்படவில்லை. பாரபட்சம்காட்டப்படுகிறது. நிதியைக் கையாளுதலில் பெருமளவு முறைகேடும் நடந்துள்ளது. எனவே இதுகுறித்து விசாரிக்க வேண்டும்என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.ருகேசன், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசின் வருவாய்த்துறைஆணையர், நாகை மாவட்ட ஆட்சித் தலைவர், வேதாரண்யம் தாசில்தார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications